Wednesday, September 11, 2019

ஆலங்குருவிகளா

Namaskaram 

Whenever we hear old songs we used to forget ourselves and travel down memory lane. Often we tell that the present songs are not good and only we hear the instrument sounds. I do agree however there are few good songs which keep coming and shake you. One such song i recently heard did this.

The song conveys that this Earth gives everything to everyone. What is needed is love towards fellow humans, birds and animals. Glad to share the lyrics with the audio link.

Cudos to Mani Amudhavan for the wonderful lyrics, Iman for tuning and the singer Sid Sriram for his soulful singing.

பாடல் - மணி அமுதவன்
இசை - இமான்
பாடியவர் - சித் ஸ்ரீராம்
படம் - பக்ரீத்

ஆலங்குருவிகளா
எங்க வாசல் வருவிகளா
ஆலங்குருவிகளா
வாழ சொல்லி தருவிகளா

அன்ப தேட எடுத்தோமே பிறவி
தங்கம் தேடி பறக்காதே குருவி
இது புரிஞ்சா
கையில் எட்டாத எட்டாத
சந்தோசம் எல்லாம்
உன் வீட்டில் உக்காருமே
கண்ணு கொட்டமா கொட்டாம
கொட்டாரம் போட்டு
திக்காடி முக்காடுமே

நம்மோட முகத்து சாயலுல
முன்னவங்க வாழ்ந்த தடம் இருக்கு
எத்தனை பேரு வந்தாலும்
வாழ்ந்துகலாம் வாங்க இடம் இருக்கு
எல்லாமே வேணுங்குற உனக்கு
அதில் காக்கும் குருவிக்கும் பங்கு இருக்கு
ஏதேதோ கோட்டை இங்கு இடிஞ்சு
அதன் மேல் இப்ப மரம்தானே முளைச்சு கிடக்கு

அரும்பும் எறும்பும் நம் சொந்தம்
திரும்பும் திசையெல்லாம் ஆனந்தம்
ஒரு நாளும் மறக்காம நமக்கு
ஒளி வாரி எறைக்காத கிழக்கு
இங்க பொறந்து யாரு வந்தாலும்
இல்லேன்னு சொல்லாம பூமி
எல்லாருக்கும் எல்லாம் தரும்
இந்த சின்னூண்டு சின்னூண்டு
பூச்சிக்குங்கூட பூ பூத்து தேனா தரும்
ஆலங்குருவிகளா.

YOUTUBE Link

Tuesday, April 16, 2019

தந்தை சொல் காத்த தனயனே



Namaskaram


Have composed a song on Lord Rama.  Glad to share this on the auspicious Sri Rama Navami.

The song is set to music by Smt Rukmini Srikrishna on Raga Hindolam.

Kindly hear and share your valuable feedback.






ராகம் – ஹிந்தோளம்



பல்லவி



தந்தை சொல் காத்த தனயனே

எம்மைக் காத்தருள் புரிவாயே – ஸ்ரீ ராம 



அனுபல்லவி



தர்மத்தில் வழுவாது நிலைத்த தலைவனே

கர்மத்தை நழுவாது செய்த தவப்புதல்வனே 



( தந்தை சொல் காத்த தனயனே )



சரணம்



அகலிகைக்கருள் செய்த காருண்ய மூர்த்தியே

குகனை தமையனாய் கொண்ட அண்ணலே

இகபர சுகம் துறந்த கோசலை மைந்தனே

சபரிக்கு முக்தியளித்த சீதா நாயகனே



( தந்தை சொல் காத்த தனயனே )



சரணம்



எண்ணற்ற பக்தர்கள் உனை துதித்தக மகிழ்ந்திட

கண்ணுற்ற அடியார்க்கு அருள் மழை பொழிந்திட 

விண்ணுற்ற தேவரும் நின் புகழ் போற்றிப் பாடிட

பண்ணுற்ற சிறியேனுக்குந்தன் கடைக்கண் காட்டிட



( தந்தை சொல் காத்த தனயனே )





எழுத்து - ஆனந்த் வாசுதேவன்


இசை அமைத்து பாடியவர் - திருமதி ருக்மிணி ஸ்ரீகிருஷ்ணா


பாடலை கேட்க கீழுள்ள உரலியை சொடுக்கவும்




You can also WhatsApp your feedback to 9582218808

Sunday, March 10, 2019

Great philosophy just presented in few words

Great philosophy just presented in few words

Wonderful lyrics by Vivek in Petta Song.

எவன்டா மேல
எவன்டா கீழ
எல்லா உயிரையும்
ஒன்னாவே பாரு

முடிஞ்ச வரைக்கும்
அன்ப சேரு
தலையில் ஏத்தி வெச்சு
கொண்டாடும் ஊரு

Wonderful lyrics from Karthik Netha

Wonderful lyrics from Karthik Netha from the film 96.

பாடியவர்: பிரதீப் குமார்
இசை: கோவிந்த் வசந்தா
பாடலாசிரியர்: கார்த்திக் நேத்தா
இயக்கம்: பிரேம் குமார்

கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே
வாழா
என் வாழ்வை வாழவே
தாழாமல் மேலே போகிறேன்
தீரா உள் ஊற்றை தீண்டவே
இன்றே இங்கே மீள்கிறேன்
இங்கே இன்றே ஆழ்கிறேன்
ஹே.. யாரோபோல்
நான் என்னைப் பார்க்கிறேன்
ஏதும் இல்லாமலே இயல்பாய்
சுடர் போல் தெளிவாய்
நானே இல்லாத
ஆழத்தில் நான் வாழ்கிறேன்
கண்ணாடியாய் பிறந்தே
காண்கின்ற எல்லாமும்
நான் ஆகிறேன்
இரு காலின் இடையிலே
உரசும் பூனையாய்
வாழ்க்கை போதும் அடடா
எதிர் காணும் யாவுமே
தீண்ட தூண்டும் அழகா..
நானே நானாய் இருப்பேன்
நாளில் பூராய் வசிப்பேன்
போலே வாழ்ந்தே சலிக்கும்
வாழ்வை மறுக்கிறேன்
வாகாய் வாகாய் வாழ்கிறேன்
பாகாய் பாகாய் ஆகிறேன்
தோ…காற்றோடு
வல்லூரு தான் போகுதே
பாதை இல்லாமலே அழகாய்
நிகழே அதுவாய்
நீரின் ஆழத்தில்
போகின்ற கல் போலவே
ஓசை எல்லாம் துறந்தே
காண்கின்ற காட்சிக்குள்
நான் மூழ்கினேன்
திமிலேரி காளை மேல்
தூங்கும் காகமாய்
பூமி மீது இருப்பேன்
புவி போகும் போக்கில்
கை கோர்த்து
நானும் நடப்பேன்
ஏதோ ஏகம் எழுதே
ஆஹா ஆழம் தருதே
தாய் போல் வாழும் கணமே
ஆரோ பாடுதே..
ஆரோ ஆரிராரிரோ..
ஆரோ ஆரிராரிரோ..
கரை வந்த பிறகே
பிடிக்குது கடலை
நரை வந்த பிறகே.
புரியுது உலகை
நேற்றின் இன்பங்கள்
யாவும் கூடியே
இன்றை இப்போதே
அர்த்தம் ஆக்குதே
இன்றின் இப்போதின்
இன்பம் யாவுமே
நாளை ஓர் அர்த்தம் காட்டுமே..

ARAM by Jeyamohan